sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரே வாரத்தில் சேதமடைந்த சிமென்ட் சிலாப்

/

ஒரே வாரத்தில் சேதமடைந்த சிமென்ட் சிலாப்

ஒரே வாரத்தில் சேதமடைந்த சிமென்ட் சிலாப்

ஒரே வாரத்தில் சேதமடைந்த சிமென்ட் சிலாப்


ADDED : பிப் 04, 2024 06:44 AM

Google News

ADDED : பிப் 04, 2024 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள், பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் மாட வீதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்க, மூன்று மாதங்களுக்கு முன், மாநகராட்சி சார்பில், சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது.

சீரமைப்பு பணி முடிந்தும் பள்ளத்தை மூடவில்லை. இதனால், இச்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குவது தொடர்ந்தது.

இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, மாநகராட்சி சார்பில், 10 நாட்களுக்கு முன், பள்ளத்தின் மீது சிமென்ட் சிலாப் போட்டு மூடப்பட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்குமுன், அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சிமென்ட் சிலாப்பின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. தரமற்ற சிமென்ட் சிலாப் போடப்பட்டதால்தான், ஒரே வாரத்தில் சிலாப் உடைந்துள்ளது.

இதனால், கம்பிகள் நீட்டிக்கொண்டு வெளியே தெரிவதால், சாலையோரம் செல்லும் பாதசாரிகள் கம்பியில் இடித்துக்கொண்டு காயமடையும் சூழல் உள்ளது.

எனவே, சேதமடைந்த சிமென்ட் சிலாப்பை அகற்றிவிட்டு, தரமான சிலாப் வாயிலாக பள்ளத்தை மூட வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us