/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான மின்கம்பம் ரயில் நிலையம் அருகே அபாயம்
/
சேதமான மின்கம்பம் ரயில் நிலையம் அருகே அபாயம்
ADDED : டிச 05, 2024 11:46 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் ஒட்டியுள்ள சாலையோரம், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ரயில்வே கடவுப்பாதை அருகில் உள்ள, ஒரு மின் கம்பத்தில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து கம்பி வெளியே தெரியும் நிலையில் உள்ளது.
இச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் சாலையோரம் சேதமான நிலையில் உள்ள மின்கம்பத்தின் மீது லேசாக உரசினாலோ, பலத்த காற்றுடன் மழை பெய்தாலோ மின்கம்பம் நொறுங்கி விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பழைய ரயில் நிலையம் அருகில், சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.