sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேகத்தடை இல்லாத வளைவு சுங்குவார்சத்திரத்தில் விபத்து அபாயம்

/

வேகத்தடை இல்லாத வளைவு சுங்குவார்சத்திரத்தில் விபத்து அபாயம்

வேகத்தடை இல்லாத வளைவு சுங்குவார்சத்திரத்தில் விபத்து அபாயம்

வேகத்தடை இல்லாத வளைவு சுங்குவார்சத்திரத்தில் விபத்து அபாயம்


ADDED : ஜன 03, 2025 01:45 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் தனியார் மருத்துவமனை, உணவகம், வங்கி, பூக்கடை, ஜவுளிக் கடைகள் என, 300 க்கும் மேற்பட்ட சிறு, குறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

சுற்றுவட்டாரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பல்வேறு தேவைக்காக நாள்தோறும் இங்கு வந்து செல்கின்றனர்.

அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள, தொழிற்சாலைகளில் பணிப்புரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், சுங்குவார்சத்திரம் பகுதியில் வாடகைக்கு தங்கி வேலைசெய்து வருகின்றனர். இதனால், எப்போதும் இங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும்.

ஸ்ரீபெரும்புதுார் -- காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத் -- மப்பேடு சாலைகள் இணையும் சுங்குவார்சத்திரம் சந்திப்பில் இருந்து, மப்பேடு செல்லும் சாலையில், 100 மீட்டர் தொலைவில் சாலை வளைந்து செல்கிறது.

அப்பகுதியில் சாலை நடுவில் 'மீடியன்' இல்லாததால், இரு புறங்களிலும் இருந்து, அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர்.

மேலும், அருகே உள்ள கடைக்கு வரும் மக்கள், வேகமாக செல்லும் வாகனங்களால் சாலை கடக்க அச்சப்படுகின்றனர்.

வாகன ஓட்டிகள் நலனைக் கருத்தில் கொண்டு, வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us