sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 பாலாற்றில் ஆபத்தான குளியல் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

/

 பாலாற்றில் ஆபத்தான குளியல் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

 பாலாற்றில் ஆபத்தான குளியல் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

 பாலாற்றில் ஆபத்தான குளியல் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்


ADDED : டிச 26, 2025 06:08 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் ஓடைபோல செல்லும் வெள்ளநீரில், ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த அக்., மாதத்தில் இருந்தே காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது, மழை நின்றுள்ள நிலையிலும், வெள்ளநீர் ஓடை போல செல்கிறது.

இந்நிலையில், அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், சிறுவர்கள் செவிலிமேடு பாலாறில் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர்.

செவிலிமேடு பாலாறில் மணல் திருட்டு நடந்த பல்வேறு இடங்களில் ஆழம் அதிகம் இருப்பதால், நீச்சல் தெரியாமல் ஆற்றில் குளிக்கும் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நிலை உள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செவிலிமேடு பாலாறில் குளிப்பதற்கு தடை விதித்து, எச்சரிக்கை பலகை வைப்பதோடு, பாலாற்றங்கரைக்கு செல்லும் வழியில் தடுப்பு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செவிலிமேடு பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us