/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தரைப்பாலம் ஓரம் மண் அரிப்பால் பள்ளம்
/
தரைப்பாலம் ஓரம் மண் அரிப்பால் பள்ளம்
ADDED : ஏப் 08, 2025 12:51 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில் இருந்து, சிறுணை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை நடுவே, கம்பன் கால்வாய் குறுக்கே தரைப்பாலம் செல்கிறது.
இந்த தரைப்பாலத்தின் வழியாக, ஒழுக்கோல்பட்டு, வதியூர், கீழ்வெண்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், கூரம், சிறுனை கூட்டுச்சாலை வழியாக, பாலுச்செட்டிசத்திரம் பகுதிக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, பாலுச்செட்டிசத்திரம், திருப்புட்குழி சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், சிறுனை, கூரம் ஆகிய கிராமங்களின் வழியாக, நெமிலி, பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.
தற்போது, கம்பன் கால்வாய் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலத்தின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த தரைப்பாலம் வழியாக செல்வோர் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, கம்பன் கால்வாய் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலத்தின் இருபுறமும் மண் அணைத்து தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.