sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விவசாயிகள் அடையாள அட்டைக்கு ஏப்.15க்குள் விண்ணப்பிக்க கெடு

/

விவசாயிகள் அடையாள அட்டைக்கு ஏப்.15க்குள் விண்ணப்பிக்க கெடு

விவசாயிகள் அடையாள அட்டைக்கு ஏப்.15க்குள் விண்ணப்பிக்க கெடு

விவசாயிகள் அடையாள அட்டைக்கு ஏப்.15க்குள் விண்ணப்பிக்க கெடு


ADDED : ஏப் 05, 2025 09:55 PM

Google News

ADDED : ஏப் 05, 2025 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் மத்திய, மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது பெற்று வருகின்றனர். இதற்காக, ஒவ்வொரு முறையும் வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண், மொபைல்போன் எண், நிலஉடைமை ஆவணங்கள் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவு செய்து வந்தனர்.

இதை தவிர்க்க, ஒவ்வொரு விவசாயிகளுக்கும், தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணியானது தற்போது நடந்து வருகிறது.

இது குறித்து, உத்திரமேரூர் வேளாண் உதவி இயக்குனர் முத்துச்செல்வி கூறியதாவது:

உத்திரமேரூர் வட்டாரத்தில் 17,000 விவசாயிகள் உள்ளனர். இவர்கள், மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களை பெற, ஒவ்வொரு முறையும் நில உடைமை ஆவணங்கள், பயிர் சாகுபடி அறிக்கை ஆகியவற்றை ஆன்லைனில் சமர்ப்பித்து வருகின்றனர்.

இதை தவிர்க்க, விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை எண் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தனித்துவ அடையாள அட்டை பெற விண்ணப்பிக்காத விவசாயிகள் இ - -சேவை மையங்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.

மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களை பெற, தனித்துவ அடையாள அட்டை எண் இருந்தால் மட்டுமே விவசாயிகள் பி.எம்.கிஷான் திட்டத்தின் வாயிலாக பயன் பெற முடியும்.

எனவே, எந்தவித கட்டணமும் இன்றி, வரும் ஏப்.15ம் தேதிக்குள், விவசாயிகள் பதிவு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us