/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தைப்பாக்கத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
/
தைப்பாக்கத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 21, 2024 01:54 AM

தைப்பாக்கம், :காஞ்சிபுரம் அடுத்த, தைப்பாக்கம் கிராமத்தில் இருந்து, வதியூர், கீழ்வெண்பாக்கம், திருமால்பூர் கிராமங்களின் வழியாக, கோவிந்தவாடி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது.
இச்சாலை குறுக்கே, கம்பன் கால்வாய் கடந்து செல்கிறது. இந்த கால்வாயில், வடகிழக்கு பருவ மழை காலங்களில், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் போது, தைப்பாக்கம் - வதியூர் இடையே வாகன போக்குவரத்து தடைபடுகிறது.
தைப்பாக்கம், சாணார் பெண்டை கிராமத்தில் இருந்து, வதியூர், ஒழுக்கோல்பட்டு, கீழ் வெண்பாக்கம் ஆகிய பகுதிக்கு செல்வோர் திருப்புட்குழி, முட்டவாக்கம் வழியாக வதியூர் செல்ல வேண்டி உள்ளது.
இதனால், தைப்பாக்கம்சுற்றியுள்ள பல்வேறு கிராமத்திற்கு, 3 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டி உள்ளது என, வாகன ஓட்டிகள் இடையே புலம்பல் ஏற்பட்டு உள்ளது.
எனவே, தைப்பாக்கம் - வதியூர் இடையே தாழ்வாக செல்லும் தரைப்பாலத்தின் மீது, உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

