sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குடிநீர் திருட்டு மோட்டார்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்

/

குடிநீர் திருட்டு மோட்டார்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்

குடிநீர் திருட்டு மோட்டார்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்

குடிநீர் திருட்டு மோட்டார்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்


ADDED : ஏப் 15, 2025 06:31 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை காலம் துவங்கியிருப்பதாக சில இடங்களில் இப்போது தண்ணீர் பிரச்னை தலை துாக்குகிறது.

கிராமப்புறங்களில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் பரவலாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டாலும் பல இடங்களில் இன்னமும் குடிநீர் பிரச்னை நிலவுகிறது.

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் போன்ற நகர்ப்புறங்களில், குடிநீர் வடிகால் வாரியம், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால், நகரவாசிகளுக்கு குடிநீர் வழங்குகிறது.

இருப்பினும், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

கிராமங்களிலும், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில், குழாய்களில் சிறிய அளவிலான மோட்டார் பொருத்தி, குடிநீரை முறைகேடாக பல ஆயிரம் லிட்டர் உறிஞ்சுகின்றனர்.

காஞ்சிபுரத்திலேயே பலரது வீடுகளில் முறைகேடான மின் மோட்டார்கள் உள்ளன. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, இதுபோன்ற முறைகேடான மோட்டார்களை பறிமுதல் செய்ய தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் கடந்தாண்டுகளில் எடுத்தனர்.

ஆனால், சமீப காலமாக மோட்டார் பறிமுதல் நடவடிக்கைகள் நீர்த்து போயின. தற்போதைய கோடை காலத்தில், முறைகேடான இணைப்புகள் மீது நடவடிக்கை தேவை என, கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us