sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெடுஞ்சாலையில் தலைதொங்கிய 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்

/

நெடுஞ்சாலையில் தலைதொங்கிய 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்

நெடுஞ்சாலையில் தலைதொங்கிய 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்

நெடுஞ்சாலையில் தலைதொங்கிய 'சிசிடிவி' கேமரா சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஏப் 04, 2025 12:47 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை உள்ளது

ஒரகடம், வல்லம் -வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளின் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பேருந்து, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் இந்த சாலையின் வழியே சென்று வருகின்றனர்.

நெடுஞ்சாலையின் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறியவும், முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் வல்லம் அடுத்த, வடகால் சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது.

இதனால், குற்ற சம்பவங்கள், மற்றும் விபத்து ஏற்படும் போது, போலீசார் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவை சீரமைத்து, முறையாக பராமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us