/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாவட்ட 'ஸ்கேட்டிங்' போட்டி திருவள்ளூர் சிறுவர்கள் உற்சாகம்
/
மாவட்ட 'ஸ்கேட்டிங்' போட்டி திருவள்ளூர் சிறுவர்கள் உற்சாகம்
மாவட்ட 'ஸ்கேட்டிங்' போட்டி திருவள்ளூர் சிறுவர்கள் உற்சாகம்
மாவட்ட 'ஸ்கேட்டிங்' போட்டி திருவள்ளூர் சிறுவர்கள் உற்சாகம்
ADDED : ஜன 23, 2024 04:44 AM

சென்னை : திருவள்ளூர் மாவட்ட அளவிலான,'ஸ்கேட்டிங்' போட்டியில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அசத்தினர்.
தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம், மாவட்ட வாரியாக ஸ்கேட்டிங் போட்டியை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகளை நடத்த அறிவுறுத்தியது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி, அம்பத்துாரை அடுத்த அத்திப்பட்டு, பிர்லா ஓபன் மைன்ட் பள்ளியில், நேற்று முன்தினம் நடந்தது.
ஐந்து வயதிற்கு உட்பட்டோர், 5 - -7, 7- - 9, 9 - 11 ஆகிய வயது பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடந்தன. இதில், 'அட்ஜஸ்டபுள் ஷூ' மற்றும் 'பேன்சி இன்லைன் ஷூ' பிரிவுகளில் முறையே, 100 மீ., மற்றும் 300 மீ., பந்தயங்கள் நடத்தப்பட்டன.
போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பிர்லா ஓபன் மைன்ட் பள்ளி இயக்குனர் மதுசூதனன், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
போட்டிகளை, திருவள்ளூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க தலைவர் ராமநாதன், செயலர் ரமேஷ்பாபு, பொருளாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் நடத்தினர்.

