/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் முன் மாடுகள் கட்டுவதால் இடையூறு
/
கோவில் முன் மாடுகள் கட்டுவதால் இடையூறு
ADDED : பிப் 03, 2025 01:59 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் கடம்பர்கோவில் கிராமத்தில், ஆவுடைநாயகி சமேத கடம்பநாதர் கோவில் உள்ளது. இங்கு, பிரதோஷம், சிவராத்திரி ஆகிய நாட்களில், சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு காஞ்சிபுரம், சென்னை, உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் இருந்து, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோவில் முன் அப்பகுதிவாசிகள் மாடுகளை கட்டி வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், கோவில் மண்டபத்தையும் பயன்படுத்த முடியவில்லை.
கோவில் நிர்வாகத்தினர் மாடுகள் கட்டுவதை தடுக்க, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே, கோவில் முன் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, மாடுகள் கட்டுவதை தடுக்க, கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.