/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களேபரம்!: மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.,வினர் கொந்தளிப்பு: தீர்மானங்கள் நிறைவேற கைகொடுத்த அ.தி.மு.க.,வினர்
/
களேபரம்!: மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.,வினர் கொந்தளிப்பு: தீர்மானங்கள் நிறைவேற கைகொடுத்த அ.தி.மு.க.,வினர்
களேபரம்!: மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.,வினர் கொந்தளிப்பு: தீர்மானங்கள் நிறைவேற கைகொடுத்த அ.தி.மு.க.,வினர்
களேபரம்!: மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.,வினர் கொந்தளிப்பு: தீர்மானங்கள் நிறைவேற கைகொடுத்த அ.தி.மு.க.,வினர்
UPDATED : செப் 06, 2024 04:14 PM
ADDED : செப் 04, 2024 01:21 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் நேற்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மேஜையை தட்டுவது, மைக்கை தட்டி விட்ட சம்பவங்கள் நடந்தன. இதற்கிடையில், அ.தி.மு.க.,வினர் ஆதரவோடு மேயர் மகாலட்சுமி, தீர்மானங்களை நிறைவேற்றினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், அ.தி.மு.க.,வின் மூன்று கவுன்சிலர்களின் ஆதரவோடு, எட்டு மாதங்கள் கழித்து மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தீர்மானங்கள் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும் என, கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் செய்ததோடு, தி.மு.க., கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் திட்டி பேசினர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க., மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, அக்கட்சியின் கவுன்சிலர்களே போர்க்கொடி உயர்த்தினர். இதைத் தொடர்ந்து மேயர் மீது, 33 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
கட்சியின் மேலிட சமரசத்தை அடுத்து, கூட்டத்தில் பங்கேற்காமல் தி.மு.க., கவுன்சிலர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
8 மாதங்களுக்கு பின்
மேயருக்கு எதிராக தி.மு.க.,வினரே போர்க்கொடி உயர்த்தியதால் மாநகராட்சி கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவியது.
கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரியதால், கடந்த ஜூலை 29ல், நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடந்தது. கட்சியின் மேலிட சமரசத்தை அடுத்து, கூட்டத்தில் பங்கேற்காமல் தி.மு.க., கவுன்சிலர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததையடுத்து, மேயர் மகாலட்சுமி, தன் பதவியில் தொடர்கிறார்.
கவுன்சிலர்கள் வெளிநடப்பு, புறக்கணிப்பு போன்ற காரணங்களால், எட்டு மாதங்களாக மாநகராட்சி கூட்டம் நடக்காமல் இருந்தது. இதனால், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவியது.
இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப் பின், அண்ணா அரங்கின் முதல் மாடியில், மாநகராட்சி கூட்டம், மேயர் மகாலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கும் முன்பாக, மேயர் ஆதரவு கவுன்சிலர்கள் முதலில் வந்தனர்.
இதையடுத்து, எதிர்ப்பு கவுன்சிலர்கள் கூட்டாக ஒன்று சேர வந்தனர். மேயர் ஆதரவு கவுன்சிலர்கள், 18 பேர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர். எதிர்ப்பு கவுன்சிலர்கள் யாரும் வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியதும், தமிழ்த்தாய் வாழ்த்து, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி, திருக்குறள் ஆகியவற்றை மேயர் மகாலட்சுமி வாசித்தார். இதையடுத்து, மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக பொறுப்பேற்ற நவேந்திரனை, கவுன்சிலர்களுக்கு, மேயர் அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து தீர்மானங்கள் தாக்கலாகின.
இதையடுத்து, 'மொத்தமுள்ள 96 தீர்மானங்களில், 3 மற்றும் 4 ஆகிய இரு தீர்மானங்கள் மட்டும் ஒத்தி வைப்பதாகவும், மற்ற தீர்மானங்கள் அனைத்தும் பாஸ் செய்யப்படுகிறது' என, மேயர் மகாலட்சுமி அறிவித்தார்.
கூச்சல், குழப்பம்
அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 'குரல் வாக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டும்' என, வாக்குவாதம் செய்து, கூட்டரங்கிலேயே தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.
மற்றொருபுறம், தி.மு.க., கவுன்சிலர்கள், சந்துரு, கார்த்தி, சுரேஷ், பிரவீன்குமார், சூர்யா மற்றும் பெண்கள் ஆகியோர் அவர்களுக்குள்ளாகவே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்கள் மேஜையை தட்டுவதும், மைக்கை தட்டி விட்டு உடைக்கும் சம்பவங்களும் அரங்கேறின. கூட்ட அரங்கின் வாசலிலும், பார்வையாளர் அறையிலும் இருந்த பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், அரசியல் கட்சியினரும் சேர்ந்து கூச்சலிட்டனர். அரை மணி நேரத்திற்கு மேலாக, கவுன்சிலர்களிடையே கூச்சல் குழப்பம் நீடித்தது.
இதையடுத்து, 'தீர்மானங்கள் அனைத்தும் பாஸ் செய்யப்படுவதாக' கூறி, மேயர் மகாலட்சுமி எழுந்து சென்றார்.
மேயர் மகாலட்சுமி, கமிஷனர் நவேந்திரன் மற்றும் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்ற பின், அண்ணா அரங்கம் வெளியே வந்த தி.மு.க.,- - அ.தி.மு.க., உள்ளிட்ட 33 எதிர்ப்பு கவுன்சிலர்கள், துணை மேயர் குமரகுருநாதன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'தீர்மானங்களை முறையாக நிறைவேற்றவில்லை' எனக்கூறி, கவுன்சிலர்கள் முழக்கமிட்டனர்.
இதையடுத்து, துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில், 33 கவுன்சிலர்களும், அண்ணா அரங்கில் இருந்து, மாநகராட்சி அலுவலகம் வரை நடந்தே சென்று, மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்க முயன்றனர்.
ஆனால், அங்கு கமிஷனர் இல்லாததால், கவுன்சிலர்கள் மீண்டும் அண்ணா அரங்கத்திற்கு திரும்பினர்.