/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செடிகளால் துார்ந்த வடிகால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
செடிகளால் துார்ந்த வடிகால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடிகளால் துார்ந்த வடிகால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடிகளால் துார்ந்த வடிகால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
UPDATED : டிச 25, 2025 08:04 AM
ADDED : டிச 25, 2025 06:11 AM

புஞ்சையரசந்தாங்கல்: புஞ்சையரசந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவில், செடிகள் வளர்ந்துள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள தெருக்கள், விவசாய நிலங்களில், பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், இக்கால்வாயில் செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் தெருவில், செடிகளால் துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

