ADDED : டிச 20, 2024 08:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில், உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் சுகுமாரன் தலைமையில் நடந்தது.
இதில், கல்லூரி மாணவ -- மாணவியருக்கு குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், போதை தடுப்பு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாணவ -- மாணவியர் பங்கேற்றனர்.

