ADDED : டிச 10, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.,ஆண்கள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், போதை ஒழிப்பு மற்றும் தற்கொலை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் மருத்துவர் பேராசிரியர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.
மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கினைப்பாளர் டாக்டர் கு.வெங்கடேசன் ஆகியோர் போதை ஒழிப்பு மற்றும் தற்கொலை தவிர்த்தல் என்ற தலைப்பில் கருத் தரங்க உரையாற்றினார்.

