sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 உலக நன்மைக்காக திருவாசகம் முற்றோதல்

/

 உலக நன்மைக்காக திருவாசகம் முற்றோதல்

 உலக நன்மைக்காக திருவாசகம் முற்றோதல்

 உலக நன்மைக்காக திருவாசகம் முற்றோதல்


ADDED : டிச 10, 2025 07:46 AM

Google News

ADDED : டிச 10, 2025 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: திருவண்ணாமலை கிரிவலக் குழு சார்பில், உலக நன்மைக்காக, காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

பன்னிரு சைவ சமய திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர், ஆயில்யம் நட்சத்திரத்திர தினத்தன்று, சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பான திருவாசகத்தை இயற்றினார்.

திருவாசகம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையிலும், உலக நன்மைக்காகவும் கார்த்திகை மாதம், ஆயில்யம் நட்சத்திரமான நேற்று, திருவண்ணாமலை கிரிவலக்குழு சார்பில், காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

இதில், கிரிவலக் குழு நிறுவன செயலர் கங்காதரன் தலைமையில், திருவாசகத்தில் உள்ள, 51 பதிகங்களில், 658 வரிகளையும், திருவண்ணாமலை கிரிவல குழுவினர் முற்றோதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us