sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பரந்துார் ஏர்போர்ட்டிற்கு நிலம் எடுப்பு ஏகனாபுரத்தினர் ஆட்சேபனை மனு

/

பரந்துார் ஏர்போர்ட்டிற்கு நிலம் எடுப்பு ஏகனாபுரத்தினர் ஆட்சேபனை மனு

பரந்துார் ஏர்போர்ட்டிற்கு நிலம் எடுப்பு ஏகனாபுரத்தினர் ஆட்சேபனை மனு

பரந்துார் ஏர்போர்ட்டிற்கு நிலம் எடுப்பு ஏகனாபுரத்தினர் ஆட்சேபனை மனு


ADDED : செப் 25, 2024 04:12 AM

Google News

ADDED : செப் 25, 2024 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் கிராமத்தில், பரந்துார் விமான நிலையம் அமைவதற்கு, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பரந்துார் விமான நிலையத்திற்கு, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை எடுக்க, தமிழக தொழில் வளர்ச்சி கழகம் செப்டம்பர் மாத துவக்கத்தில் அறிவிப்பு வெளியானது.

இதைக் கண்டித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடந்தினர்.

இந்நிலையில், பரந்துார் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது என, நேற்று காலை, காரை கிராமத்தில் இயங்கும் பரந்துார் விமான நில எடுப்பு அலுவலகத்திற்கு, ஏகனாபுரம் கிராமத்தினர் பெண்களுடன் வந்து, ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் துறையினரிடம், உங்கள் மனு அரசிற்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us