ADDED : ஏப் 02, 2025 08:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, போலீசார் நேற்று, கச்சிப்பட்டு, காமராஜ் நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஆன்ஸ், விமல், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரித்தது.
இதையடுத்து, 10 கிலோ குட்கா பொருட்ளை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் செல்வம், 59, என்பவரை கைது செய்தனர்.

