ADDED : நவ 24, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: ஏனாத்துார் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மூதாட்டி இறந்தார்.
காஞ்சிபுரம், கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி, 65. இவர், விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை 4:30 மணியளவில், விவசாய நிலத்திற்கு செல்ல ஏனாத்துார் - காஞ்சிபுரம் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம், செல்வி மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து காஞ்சி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

