/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்நடை குடிநீர் தொட்டி சீரமைக்க வலியுறுத்தல்
/
கால்நடை குடிநீர் தொட்டி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 27, 2024 11:57 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம்m களக்காட்டூரில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், 2018 - 19ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20 ஆயிரம் ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
ஊராட்சி நிர்வாகம் சார்பில், கால்நடை தொட்டிக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்ட முறையாக தண்ணீர் நிரப்பப்பட்டது. மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடுகள் கால்நடை தொட்டியில் தேக்கி வைக்கப்படும் குடிநீரை பருகி தாகம் தீர்த்து வந்தன.
இந்நிலையில், கால்நடை குடிநீர் தொட்டியில் ஓட்டை ஏற்பட்டுள்ளதால், தொட்டியில் குடிநீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், கால்நடை தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், கால்நடை தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, களக்காட்டூர் கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.