/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சேருங்கள்: கலெக்டர்
/
அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சேருங்கள்: கலெக்டர்
அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சேருங்கள்: கலெக்டர்
அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சேருங்கள்: கலெக்டர்
ADDED : மே 29, 2025 12:16 AM
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில், 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சேருங்கள்' என, கலெக்டர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் வாயிலாக ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 940 அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன.
குறிப்பாக 2 வயது முதல், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, அங்கன்வாடி மையத்தில், செயற்கைப் பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் வாயிலாக முறைசாரா முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம், மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும், குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, பெற்றோர் தங்களது, 2 - 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, ஜூன் மாதத்தில் அங்கன்வாடி மையத்தில் தவறாது சேர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.