sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நத்தாநல்லுார் ஏரி மண் குவாரியை முற்றுகையிட்ட விவசாயிகள்

/

நத்தாநல்லுார் ஏரி மண் குவாரியை முற்றுகையிட்ட விவசாயிகள்

நத்தாநல்லுார் ஏரி மண் குவாரியை முற்றுகையிட்ட விவசாயிகள்

நத்தாநல்லுார் ஏரி மண் குவாரியை முற்றுகையிட்ட விவசாயிகள்


ADDED : ஜூலை 30, 2025 11:47 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:நத்தாநல்லுார் ஏரி மண் குவாரியை விதிகளுக்கு உட்பட்டு இயக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள், மண் குவாரி பகுதியில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுார் கிராமத்தில் நீர்வளத் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில், அரசு அனுமதியோடு தனியார் மண் குவாரி, 10 நாட்களாக இயங்குகிறது.

இக்குவாரியில் விதிமுறைகளை மீறி மண் எடுப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மதியம் நத்தாநல்லுார் ஏரியில் குவிந்தனர்.

ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவிலான ஆழம் மட்டும் தோண்டி மண் அள்ள வேண்டும். ஒரே இடத்தில் அதிக ஆழம் தோண்டுவதை தவிர்க்க வேண்டும்.

அவ்வாறு ஆழம் தோண்டுவதால் பள்ளங்கள் ஏற்பட்டு மழைக்காலத்தில் ஏரியில் பரவலாக தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, ஏரியில் சமமான அளவிற்கு நீர்பிடிப்பு பகுதி முழுக்க பரவலாக துார்வாரி மண் எடுக்க வேண்டும் என கோரி முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று விவசாயிகளிடம் சமாதான பேச்சு நடத்தினர்.

விதிகளுக்கு உட்பட்டு மண் குவாரி செயல்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us