/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் நெற்களம் இல்லாததால் சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகள்
/
உத்திரமேரூரில் நெற்களம் இல்லாததால் சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகள்
உத்திரமேரூரில் நெற்களம் இல்லாததால் சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகள்
உத்திரமேரூரில் நெற்களம் இல்லாததால் சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகள்
ADDED : ஜூலை 22, 2025 12:54 AM

உத்திரமேரூர்,
-உத்திரமேரூரில் நெற்களம் இல்லாததால் சாலையில் விவசாயிகள் நெல்லை உலர்த்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் பேரூராட்சி, 18 வார்டுகளில் 40,000 பேர் வசிக்கின்றனர். இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் ஒவ்வொரு பருவமும் 5,000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
சாகுபடி செய்யப்பட்ட நெல்லை அறுவடை செய்து, அதை உலர்த்த உத்திரமேரூரில் நெற்கள வசதி இல்லாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் சாலையின் ஓரங்களிலும், முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையிலும் நெல்லை கொட்டி உலர்த்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நெல் அறுவடை பருவத்திலும் விவசாயிகள் நெல்லை உலர்த்த, போதிய இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். உத்திரமேரூரில் நெற்களம் அமைக்க விவசாயிகள், மாவட்ட குறைதீர் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
எனவே, உத்திரமேரூர் பேரூராட்சியில் விவசாயிகளின் நலன் கருதி, நெற்களம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.