sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூரில் நெற்களம் இல்லாததால் சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகள்

/

உத்திரமேரூரில் நெற்களம் இல்லாததால் சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகள்

உத்திரமேரூரில் நெற்களம் இல்லாததால் சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகள்

உத்திரமேரூரில் நெற்களம் இல்லாததால் சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகள்


ADDED : ஜூலை 22, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்,

-உத்திரமேரூரில் நெற்களம் இல்லாததால் சாலையில் விவசாயிகள் நெல்லை உலர்த்தி வருகின்றனர்.

உத்திரமேரூர் பேரூராட்சி, 18 வார்டுகளில் 40,000 பேர் வசிக்கின்றனர். இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் ஒவ்வொரு பருவமும் 5,000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சாகுபடி செய்யப்பட்ட நெல்லை அறுவடை செய்து, அதை உலர்த்த உத்திரமேரூரில் நெற்கள வசதி இல்லாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் சாலையின் ஓரங்களிலும், முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையிலும் நெல்லை கொட்டி உலர்த்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நெல் அறுவடை பருவத்திலும் விவசாயிகள் நெல்லை உலர்த்த, போதிய இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். உத்திரமேரூரில் நெற்களம் அமைக்க விவசாயிகள், மாவட்ட குறைதீர் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

எனவே, உத்திரமேரூர் பேரூராட்சியில் விவசாயிகளின் நலன் கருதி, நெற்களம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us