sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பொருளீட்டு கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

/

பொருளீட்டு கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொருளீட்டு கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொருளீட்டு கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : டிச 14, 2024 07:56 PM

Google News

ADDED : டிச 14, 2024 07:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:-உத்திரமேரூர் ஒன்றியம், வேடபாளையத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு, திருப்புலிவனம், பெருநகர், கலியாம்பூண்டி, உத்திரமேரூர் உட்பட 50க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து, விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தும், இருப்பு வைத்தும் வருகின்றனர்.

மேலும், விவசாயிகள் நெல் இருப்பு வைத்து, அதன் வாயிலாக பொருளீட்டு கடனும் பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் துவங்கி நேற்று வரை 1,49,000 கிலோ நெல் இருப்பு வைக்கப்பட்டு, அதற்கான பொருளீட்டு கடன் 18,68,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் யுவராஜ் கூறியதாவது:

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வதோடு மட்டுமின்றி, அதை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறலாம். இருப்பு வைக்கும் நெல், பாதுகாப்பாக வைக்க போதிய இடவசதி உள்ளது.

எனவே, உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அணுகி, விளைபொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று பயன் அடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us