/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் வரும் 19ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
காஞ்சியில் வரும் 19ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
காஞ்சியில் வரும் 19ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
காஞ்சியில் வரும் 19ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : டிச 12, 2025 05:39 AM
காஞ்சிபுரம்: விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 19ம் தேதி நடக்க இருப்பதாக, காஞ்சி புரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும், 19ம் தேதி, கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில், கலைச்செல்வி தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் பல துறை அலுவலர்கள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் துறை, தோட்டக்கலை, மின் வாரியம், வருவாய், கூட்டுறவு, கால்நடை என, வேளாண் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நேரடியாகவும், மனுவாகவும் தெரிவிக்கலாம்.
தோட்டக்கலை துறை அதிகாரிகளுடன், விவசாயி கள் ஒருங்கிணைந்து, விவசாய அடையாள எண் வழங்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இதுதவிர, சிறு, குறு விவசாயிகள் 100 சதவீதம்; இதர விவசாயிளுக்கு 75 சதவீத மானியத்துடன் நுண் ணீர் பாசன திட்டம் அனுமதி வழங்கப்பட உள்ளது.
பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஆதார், நீர் பரிசோதனை அறிக்கை, நில வரைபடம், அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் அலுவலகத்தை நாடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

