sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரும்புலியூரில் ஆபத்தான சாலை வளைவால் அச்சம்

/

அரும்புலியூரில் ஆபத்தான சாலை வளைவால் அச்சம்

அரும்புலியூரில் ஆபத்தான சாலை வளைவால் அச்சம்

அரும்புலியூரில் ஆபத்தான சாலை வளைவால் அச்சம்


ADDED : மே 09, 2025 01:59 AM

Google News

ADDED : மே 09, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில் இருந்து, அரும்புலியூர் வழியாக அருங்குன்றம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது.

இச்சாலை வழியில் அரும்புலியூர், சீத்தாவரம், பழவேரி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.

சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும், இருசக்கர வாகனங்கள் மூலம் இச்சாலையை பயன்படுத்தி சாலவாக்கம், வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு போன்ற பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இச்சாலையில், அரும்புலியூர் அருகே அடுத்தடுத்து மூன்று இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன.

வளைவு பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இரவு நேரங்களில் மின்வசதி இல்லமால் இருள் சூழந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தோடு வாகனங்களில் சென்று வருகின்றனர்.

எனவே, இச்சாலையில் உள்ள வளைவு பகுதிகளில், எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு அமைத்து விபத்துகள் எற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us