sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாஞ்சா நுால் அறுத்து பெண் போலீஸ் காயம்

/

மாஞ்சா நுால் அறுத்து பெண் போலீஸ் காயம்

மாஞ்சா நுால் அறுத்து பெண் போலீஸ் காயம்

மாஞ்சா நுால் அறுத்து பெண் போலீஸ் காயம்


ADDED : ஜன 21, 2025 01:06 AM

Google News

ADDED : ஜன 21, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை, அண்ணா நகர் மேம்பாலம் வழியாக பைக்கில் சென்றபோது, மாஞ்சா நுால் அறுத்து, அமைந்தகரை பெண் போலீஸ் காயமடைந்தார்.

புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ரம்யா, 26. இவர், அமைந்தகரை காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார்.

ரம்யா நேற்று முன்தினம் மாலை, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக, அண்ணா நகரை நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்றார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா வளைவு மேம்பாலத்தில் ஏறும்போது, எதிர்பாராத விதமாக கழுத்தில் மாஞ்சா நுால் சிக்கியது. சுதாரித்த ரம்யா, உடனடியாக நுாலை கையில் பிடித்ததில், கையிலும், கழுத்திலும் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.

நிலைத்தடுமாறி கீழே விழுந்தவரை அங்கிருந்தோர் மீட்டு, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்றார்.

அமைந்தகரை பகுதியில் சில நாட்களாக, காற்றாடி அதிகம் வலம் வருகிறது. இதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us