/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
/
தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
ADDED : பிப் 08, 2024 12:02 AM
காஞ்சிபுரம்,:சாலை பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தீயணைப்பு துறை சார்பில், வாகன ஓட்டுனர்களுக்கு வாகனங்களில் தீயணைப்பானை பயன்படுத்தி, தீ பரவலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு, காஞ்சிபுரம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் க.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
தீயணைப்பு கருவியை, ஓட்டுனர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சங்கர், செயல்முறையுடன் விளக்கினார்.
சாலை விதிகளை மதிப்போம், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என, இதில் பங்கேற்றோர் உறுதிமொழி ஏற்றனர்.

