sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மழையால் மலர்கள் விலை சரிவு கிலோ முல்லை ரூ.80; பன்னீர் ரோஜா ரூ.60

/

மழையால் மலர்கள் விலை சரிவு கிலோ முல்லை ரூ.80; பன்னீர் ரோஜா ரூ.60

மழையால் மலர்கள் விலை சரிவு கிலோ முல்லை ரூ.80; பன்னீர் ரோஜா ரூ.60

மழையால் மலர்கள் விலை சரிவு கிலோ முல்லை ரூ.80; பன்னீர் ரோஜா ரூ.60


ADDED : அக் 16, 2024 12:52 AM

Google News

ADDED : அக் 16, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தை மாவட்டத்தை சுற்றியுள்ள வெம்பாக்கம், பூஞ்சேரி, சேந்தமங்கலம், கண்டிகை, மேலச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முல்லைப்பூ, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில், சில நாட்களாக பெய்து வரும் மழையால், காஞ்சிபுரத்தில் பூக்களின் விலை சரிந்துள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம், பூக்கடை சத்திரத்தைச் சேர்ந்த மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடை உரிமையாளர் பாலாஜி கூறியதாவது:

கடந்த வாரம் ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்து இருந்தது. தற்போது மழையின் காரணமாகவும், முகூர்த்த நாட்கள் எதுவும் இல்லாததால், பூக்களின் விலை சரிந்துள்ளது.

அதன்படி, கடந்த வாரம் கிலோ 500க்கு விற்ற முல்லைப்பூ 80 ரூபாய்க்கும், 800க்கு விற்ற மல்லிகைப்பூ 200க்கும், 240க்கு விற்ற பன்னீர் ரோஜா 60க்கும், 800க்கு விற்ற கனகாம்பரம் 200க்கும், 300க்கு விற்ற சம்பங்கி 60க்கும், 500க்கு விற்ற ஜாதிமல்லி 240க்கும் விற்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us