sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அய்யப்பன் கோவிலில் மலர் பூஜை விமரிசை

/

அய்யப்பன் கோவிலில் மலர் பூஜை விமரிசை

அய்யப்பன் கோவிலில் மலர் பூஜை விமரிசை

அய்யப்பன் கோவிலில் மலர் பூஜை விமரிசை


ADDED : டிச 17, 2024 01:02 AM

Google News

ADDED : டிச 17, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்,

வாலாஜாபாதில் அருள் தரும் அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மலர் பூஜை விழா மற்றும் அன்ன தானம் பூஜை நடப்பது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, 7:00 மணிக்கு அன்ன தானம் அளிக்கப்பட்டது.

காலை 10:00 மணிக்கு, நெய் அபிஷேகம் மற்றும் மகா அபிஷேகமும், 12:00 மணிக்கு பகல் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

அப்போது, மலர் அலங்காரத்தில் எழுந்தருளியஅய்யப்பன், முக்கிய வீதிகளில் உலா வந்தார்.தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு, பஜனை பாடல்கள் மற்றும் மகா ஜோதி நிகழ்ச்சி நடந்தது.இதில், அய்யப்பன்பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

உத்திரமேரூர் இரட்டை தாலீஸ்வரர் கோவில் வளாகத்தில், அய்யப்பன் சன்னிதி உள்ளது.

இங்கு, உத்திரமேரூர் அய்யப்பா சேவா சங்கம் சார்பில், 19-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று காலை நடந்தது.முன்னதாக, மூலவருக்கு நெய், பால், இளநீர்,சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பக்தர்கள்பஜனை பாடல்கள்பாடியவாறு, திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us