sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 பனி பொழிவால் பூ விளைச்சல் குறைவு

/

 பனி பொழிவால் பூ விளைச்சல் குறைவு

 பனி பொழிவால் பூ விளைச்சல் குறைவு

 பனி பொழிவால் பூ விளைச்சல் குறைவு


ADDED : நவ 22, 2025 01:16 AM

Google News

ADDED : நவ 22, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால், காஞ்சிபுரத்தில் மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மல்லிகை, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இப்பகுதியில், பனிப்பொழிவு நிலவி வருவதால், பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, காஞ்சிபுரத்திற்கு பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இதனால், கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் நேற்று பல்வேறு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து இருந்தது.

அதன்படி, கடந்த மாதம் கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று, 1,500 ரூபாய்க்கும், 250ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லை, 1,000 ரூபாய்க்கும், 800க்கு விற்கப்பட்ட கனகாம்பரம், 1,500 ரூபாய்க்கும், 25 0க்கு விற்கப்பட்ட ஜாதிமல்லி 800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.






      Dinamalar
      Follow us