/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளிகளுக்கான கால்பந்து: இந்துஸ்தான் அணி வெற்றி
/
பள்ளிகளுக்கான கால்பந்து: இந்துஸ்தான் அணி வெற்றி
ADDED : ஜன 30, 2025 12:17 AM

சென்னை, : பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், படூர் இந்துஸ்தான் சர்வதேச பள்ளி, 8 - 0 என்ற கணக்கில், ஹார்ட்புல்னஸ் பள்ளியை தோற்கடித்தது.
சென்னையின் எப்.சி., - இங்கிலாந்து நார்விச் சிட்டி எப்.சி., கிளப் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை, சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மைதானத்தில் நடத்துகின்றன. யு - 12, யு - 14 பிரிவினர் மட்டும் விளையாடுகின்றனர்.
'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டியில், இருபிரிவிலும் தலா 32 அணிகள் என, மொத்தம் 64 அணிகள் பங்கேற்றுள்ளன.
பிப்., மூன்றாம் வாரம் வரை போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
நேற்று நடந்த போட்டிகளில் மூன்று அணிகள் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்து.

