/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூலியை ரொக்கமாக வழங்க முன்னாள் தலைவர்கள் மனு
/
கூலியை ரொக்கமாக வழங்க முன்னாள் தலைவர்கள் மனு
ADDED : பிப் 11, 2025 12:54 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், பருத்தி, பட்டு நெசவுக்கான கூலி இதுவரையில், சங்க அலுவலகத்தில் ரொக்கமாக கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், நெசவாளர்களுக்கு கூலியை வங்கியில் வரவு வைக்க கைத்தறி துறை அறிவுறுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக, கைத்தறி துறை துணை இயக்குநர் மணிமுத்து, அனைத்து சங்கங்களுக்கும், நெசவு கூலி பற்றிய அறிவிப்பு கடிதங்களை அனுப்பியுள்ளார்.
நெசவு கூலியை வங்கியில் செலுத்த உள்ளதால், நெசவாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தங்களது நெசவு கூலியை, ரொக்கமாக கையில் கொடுக்க வேண்டும் என, நெசவாளர்கள் மட்டுமல்லாமல், கைத்தறி சங்க நிர்வாகிகளும் வலியுறுத்துகின்றனர்.
இதுசம்பந்தமாக, கம்யூனிஸ்ட், அ.தி.மு.க., ஆகிய கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் முன்னாள் தலைவர்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்தவர்கள், கலெக்டர் கலைச்செல்வியை நேற்று சந்தித்து மனு அளித்தனர்.
வங்கியில் நெசவு கூலியை வரவு வைக்க கூடாது எனவும், இதனால் நடைமுறை சிக்கல் ஏற்படும் எனவும், ரொக்கமாகவே கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.