sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இரவில் எரிக்கப்படும் குப்பை பரணிபுத்துார்வாசிகள் அவதி

/

இரவில் எரிக்கப்படும் குப்பை பரணிபுத்துார்வாசிகள் அவதி

இரவில் எரிக்கப்படும் குப்பை பரணிபுத்துார்வாசிகள் அவதி

இரவில் எரிக்கப்படும் குப்பை பரணிபுத்துார்வாசிகள் அவதி


ADDED : பிப் 05, 2024 06:45 AM

Google News

ADDED : பிப் 05, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார் குன்றத்துார் ஒன்றியத்தில் பரணிபுத்துார் ஊராட்சி அமைந்துள்ளது. சென்னை போரூர் அருகே புறநகர் பகுதியில் இந்த ஊராட்சி அமைந்துள்ளதால், குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இங்கு சேகரமாகும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள், ஜோதி நகர், ஆண்டவர் நகர் பகுதிகளில் கொட்டப்படுகின்றன.

இரவு நேரத்தில், இந்த குப்பை கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இவை 10 அடி உயரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்து கரும்புகை வெளியேறுவதால், சுற்றுவட்டார குடியிருப்புவாசிகள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், புகை மூட்டம் ஏற்படுகிறது. சிறுவர்கள், முதியோர், கர்ப்பிணியர் என, அனைத்து தரப்பினரும் மூச்சுத்திணறலால் அவதிக்குள்ளாகின்றனர்.

புகையால் இரவு நேரத்தில் நிம்மதியாக துாங்க முடியவில்லை. இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கூறினால் குப்பை அகற்ற வேறு வழியில்லை என, அலட்சியமாக பதிலளிக்கின்றனர்.

எனவே, குப்பை கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us