/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீனிவாசர் கோவிலில் வரும் 9ல் கருடசேவை
/
சீனிவாசர் கோவிலில் வரும் 9ல் கருடசேவை
ADDED : ஜூன் 02, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாம்பதி:உத்திரமேரூர் அடுத்த, மானாம்பதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில், வரும் 9ம் தேதி, 19வது ஆண்டு கருடசேவை உத்சவம் நடைபெறுகிறது.
உத்சவத்தையொட்டி, வரும் 8ம் தேதி இரவு 8:00 மணிக்கு மூலவருக்கும், தாயாருக்கும் திருமஞ்சனமும், தொடர்ந்து மஹா தீபாராதனையும் நடைபெற உள்ளது.
வரும் 9ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு கருடசேவை கோபுர தரிசனமும், தொடர்ந்து வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு ஏகாந்த சேவை, தீபாராதனை உள்ளிட்டவையும், மதியம் 1:00 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம், மஹா தீபாராதனையும் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளும் சீனிவாச பெருமாள் வீதியுலா வரவுள்ளார்.