/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடத்துனரின் டிக்கெட் பை 20,000 ரூபாயுடன் 'ஆட்டை'
/
நடத்துனரின் டிக்கெட் பை 20,000 ரூபாயுடன் 'ஆட்டை'
ADDED : பிப் 16, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை, புதுச்சேரி வரை செல்லும் அரசு விரைவு பேருந்து ஒன்று, பயணியருடன் புறப்பட்டுச் சென்றது.
இப்பேருந்து, கோயம்பேடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே வரும்போது, நடத்துனர் ஜெகதீசன், 40, தன் டிக்கெட் பையை காணாமல் தேடியுள்ளார். பின், பேருந்து மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு திரும்பியது. இதுகுறித்து, கோயம்பேடு போலீசில் ஜெகதீசன் புகார் அளித்தார்.
அந்த பையில், 20,000 ரூபாய் மற்றும் 38,000 ரூபாய் மதிப்பிலான பேருந்து டிக்கெட்டுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.