/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
9 ஊராட்சிகளில் நாளை மறுநாள் கிராம சபை கூட்டம்
/
9 ஊராட்சிகளில் நாளை மறுநாள் கிராம சபை கூட்டம்
ADDED : டிச 25, 2025 05:48 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சிகளில், நாளை மறுநாள் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வாரந்தோறும் சில ஊராட்சி களை தேர்வு செய்து, வரவு -- செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம்.
வளத்தோட்டம், பெரும்பாக்கம், சேத்துப்பட்டு, பழந்தண்டலம், தத்தனுார், வல்லக்கோட்டை, பெருநகர், புலியூர், சித்தனக்காவூர் ஆகிய ஒன்பது ஊராட்சிகளில், நாளை மறுநாள் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

