/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
15 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்
/
15 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்
ADDED : நவ 20, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 15 ஊராட்சிகளில் நாளை, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
தற்போது, 20வது சுற்றுக்கு கூரம், முட்டவாக்கம், திருபருத்திகுன்றம், வேடல், வேளியூர், வேண்பாக்கம், போந்துார், ராமானுஜபுரம், நாட்டரசன்பட்டு, பெரியபனிச்சேரி, எருமையூர், நெய்யாடுவாக்கம், ஓடந்தாங்கல், வாடாதவூர், சிலம்பாக்கம் ஆகிய 15 ஊராட்சிகளில், சமூக தணிக்கை நடைபெறுகிறது.
இதற்கான, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், நாளை நடைபெறும். இதில், ஊராட்சி வரவு - செலவு கணக்குகள், பொது மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

