/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 13 ஊராட்சியில் வரும் 4ல் கிராம சபை கூட்டம்
/
காஞ்சியில் 13 ஊராட்சியில் வரும் 4ல் கிராம சபை கூட்டம்
காஞ்சியில் 13 ஊராட்சியில் வரும் 4ல் கிராம சபை கூட்டம்
காஞ்சியில் 13 ஊராட்சியில் வரும் 4ல் கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 01, 2025 07:29 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு - செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது.
தற்போது, அங்கம்பாக்கம், தம்மனுார், மருதம், ஒழையூர், வையாவூர், கடுவஞ்சேரி, குண்டுபெரும்பேடு, பேரீஞ்சம்பாக்கம், சாலமங்கலம், வைப்பூர், பழவேரி, நெய்யாடிவாக்கம், பெருநகர் ஆகிய கிராமங்களில், நாளை மறுநாள் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.