/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாளை 12 ஊராட்சிகளில் சமூக தணிக்கை கிராம சபை
/
நாளை 12 ஊராட்சிகளில் சமூக தணிக்கை கிராம சபை
ADDED : ஜன 29, 2025 07:04 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு - செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது.
தற்போது, 19வது சுற்றுக்கு அய்யங்கார்குளம், திருப்பருத்திகுன்றம், புதுப்பாக்கம், கோவிந்தவாடி, படுநெல்லி, பொடவூர், கீரநல்லுார், ராமானுஜபுரம், வட்டம்பாக்கம், வளையங்கரணை, அரும்புலியூர், திருவாணைக்கோவில் ஆகிய கிராமங்களில், நாளை சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.