/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
13 ஊராட்சிகளில் நாளை சமூக தணிக்கை கிராம சபை
/
13 ஊராட்சிகளில் நாளை சமூக தணிக்கை கிராம சபை
ADDED : நவ 13, 2024 07:44 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு, செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது.
தற்போது, 10வது சுற்றுக்கு, கீழ்கதிர்பூர், விப்பேடு, தொள்ளாழி, வாரணவாசி, பென்னலுார், மேவளூர்குப்பம், வளர்புரம், சோமங்கலம், நடுவீரப்பட்டு, கடல்மங்கலம், தளவாரம்பூண்டி, மலையாங்குளம், காட்டாங்குளம் ஆகிய 13 ஊராட்சிகளில், சமூக தணிக்கை நடைபெறுகிறது.
இதற்கு, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், நவ.,15ம் தேதி நடைபெறும். நிறை, குறைகளை பொது மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட உள்ளது.