ADDED : ஏப் 24, 2025 08:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் மே 1ம் தேதி காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்தும், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் பற்றியும் விவாதிக்கப்படும்.
மேலும், கிராம ஊராட்சிகள், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு- செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்த வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.