ADDED : செப் 24, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாதந்தோறும் இரண்டு செவ்வாய்க்கிழமைகளில், அமைச்சர் அன்பரசன் தலைமையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் கூட்டம் நடக்கிறது.
இந்நிலையில், செப்., மாதத்திற்கான இரண்டாவது கூட்டம், இன்று காலை 11:00 மணிக்கு, கலெக்டர் வளாக கூட்டரங்கில், அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என, சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு தெரிவித்துள்ளது.