ADDED : ஜன 10, 2025 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம், மாதந்தோறும் தாலுகா வாரியாக, கிராமப்புறங்களில் நடைபெற்று வருகிறது. இதில், ரேஷன் அட்டை விண்ணப்பம் செய்வது, திருத்தம் செய்வது, நகல் அட்டை, மொபைல் எண் சேர்ப்பது, நீக்கம் செய்வது உள்ளிட்ட சேவைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
ஜனவரி மாதத்திற்கான குறைதீர் கூட்டம், இன்று நடைபெறும் என கலெக்டர் கலைச்செல்வி அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் தாலுகாவில் கரூர் கிராமத்திலும், உத்திரமேரூர் தாலுகாவில் கம்மாளம்பூண்டியிலும் நடக்கிறது.
மேலும், வாலாஜாபாத் தாலுகாவில் ஆற்பாக்கத்திலும், ஸ்ரீபெரும்புதுாரில் வடமங்கலத்திலும், குன்றத்துாரில் பழந்தண்டலத்திலும் காலை 10:00 மணிக்கு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

