/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குரூப் -- - 1 தேர்வுக்கு 7ம் தேதி முதல் பயிற்சி
/
குரூப் -- - 1 தேர்வுக்கு 7ம் தேதி முதல் பயிற்சி
ADDED : ஏப் 03, 2025 07:49 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 1 பதவிகளில் வரும், துணை ஆட்சியர், டி.எஸ்.பி., ஊரக மேம்பாடு உதவி இயக்குநர் உள்ளிட்ட, 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் - 1ஏ பதவிகளில் வரும் 2 வன உதவி பாதுகாவலர் காலிப் பணியிடங்களுக்கும் என, மொத்தம் 72 காலிப் பணியிடங்களுக்கான கடந்த ஏப்ரல் 1ம் தேதி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.
தேர்வுக்கு தயாராகும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஏப்., 7ம் தேதி முதல் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விபரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு 044 -27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

