/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா
/
கன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா
ADDED : செப் 02, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், காரணிமண்டபம் கன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், காரணிமண்டபம் கிராமத்தில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆனி மாத கூழ்வார்த்தல் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.
முன்னதாக, காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு நெய், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
காலை 10:00 மணிக்கு அம்மன் பூங்கரகத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், 11:00 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து, அம்மனுக்கு கூழ்வார்த்து வேண்டுதல் செய்தனர்.