நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:பாப்பநல்லுாரில், பெட்டிக்கடையில் குட்கா பொ ருட்கள் விற்ற கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பாப்பநல்லுார் கிராமத்தில், உத்திரமேரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள ராமமூர்த்தி, 55, என்பவரின் பெட்டிக் கடையில் சோதனை செய்தனர்.
அப்போது, 10 பாக்கெட் குட்கா பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான ராமமூர்த்தியை கைது செய்தனர்.