/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி
ADDED : நவ 21, 2024 11:22 PM

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி மற்றும் காஞ்சிபுரம் அடுத்த, வெம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வேளாண்மை தொழிற்கல்வி பயிலும் மாணவ - -மாணவியர் பண்ணை சுற்றுலா திட்டத்தின் வாயிலாக, 10 நாட்கள் தோட்டக்கலை நேரடி களபயிற்சி பெறுவதற்காக, காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலை, விச்சந்தாங்கலில் அரசு தோட்டக்கலை பண்ணைக்கு நேற்று வந்தனர்.
இப்பண்ணையில், தோட்டக்கலை அலுவலர் சே.சவுமியா, உதவி தோட்டக்கலை அலுவலர் மு.தனஞ்ஜெயன் ஆகியோர், மாணவ- - மாணவியருக்கு, நவீன தொழில்நுட்பத்தில் எவ்வாறு செடிகள் வளர்ப்பது, பதியன் போடுதல், ஒட்டு கட்டுதல், மண்புழு உரம், மண் கலவை தயாரித்தல், களை எடுத்தல் உள்ளிட்ட தோட்டக்கலை சார்ந்த பணிகளை செயல் விளக்க முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.
இத்திட்டத்தில் பிற அரசு பள்ளியைச் சேர்ந்த வேளாண்மை தொழிற்கல்வி பயிலும் பள்ளி மாணவ - -மாணவியரும் பங்கேற்கலாம் என, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.