sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் 30 அடி சாலை 15 அடியாக மாறிய அவலம்

/

காஞ்சியில் 30 அடி சாலை 15 அடியாக மாறிய அவலம்

காஞ்சியில் 30 அடி சாலை 15 அடியாக மாறிய அவலம்

காஞ்சியில் 30 அடி சாலை 15 அடியாக மாறிய அவலம்


ADDED : நவ 04, 2024 03:45 AM

Google News

ADDED : நவ 04, 2024 03:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாயார்குளம் அருகே, குரு கோவில் எனப்படும் காயரோகணேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோவில் அமைந்துள்ள சாலையில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், 15 அடிக்கும் மேலாக, சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனம், கார், லாரி போன்ற வாகனங்கள் எளிதாக இயக்க முடியாத நிலை நீடிக்கிறது.

ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளால், அவ்வழியாக மின்தடம் தொடர்பான பணிகள் மேற்கொள்வதில், மின்வாரிய ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.

தாயார்குளம் நான்குமுனை சந்திப்பில் இருந்து கிருஷ்ணன் தெரு வரை, 30 அடி அகலம் கொண்ட இச்சாலை, 15 அடியாக குறைந்துள்ளது. பல இடங்களில், குறுகியும், நீண்டும் உள்ளது. இச்சாலையை ஆக்கிரமித்து கடைகள், திண்ணை போன்றவை கட்டியுள்ளனர்.

எனவே, மாநகராட்சிக்குட்பட்ட இச்சாலை ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் நகரவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us