/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடல் அரசு பள்ளி கழிப்பறை கட்டடம் திறப்பு
/
திருமுக்கூடல் அரசு பள்ளி கழிப்பறை கட்டடம் திறப்பு
ADDED : அக் 30, 2024 06:17 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில், 250 மாணவ - மாணவியர் பயின்றனர். இந்த பள்ளியில், மாணவ - மாணவியருக்கு என, தனித்தனியாக கழிப்பறை கட்டட வசதி ஏற்படுத்த, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 5.90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணி துவங்கி, ஆறு மாதங்களுக்கு முன் நிறைவு பெற்றது. எனினும், பயன்பாட்டுக்கு வராமல் கழிப்பறை கட்டடம் வீணாகி வந்தது. இதனால், அப்பள்ளி மாணவ - மாணவியர் பள்ளியின் விளையாட்டு மைதானம் அருகே திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலை இருந்து வந்தது.
எனவே, புதிய கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்த செய்தி, கடந்த 26ம் தேதி நம் நாளிதழில் வெளியானது. அதையடுத்து, உத்திரமேரூர் பி.டி.ஒ., லோகநாதன் முன்னிலையில், நேற்று முன்தினம் மாணவர்களுக்கான கழிப்பறை கட்டடம் திறந்து பயன்பாட்டிற்கு விடப்பட்டது.